வெள்ளி, 23 செப்டம்பர், 2011

இந்தியாவிற்கு சீனா போடும் சுருக்குக் கயிறு


சீனா இந்தியாவைச் சுற்றி மறைமுக கடற்படைத் தளங்களை அமைத்துவருகிறது. உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து மாக்கடலுாடாகவே நடக்கிறது. இந்தப் பாரிய கடல் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள சீனா ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.
.
இந்தியாவின் வடபகுதி முழுக்க எதிரிகளான சீனாவினதும் பாக்கிஸ்தானுடன் உள்ளது. நேப்பாளமும் பங்களா தேசமும் இந்தியச் சார்பான நாடுகள் அல்ல. இந்தியாவின் எனைய எல்லைகள் யாவும் கடற்பரப்பாகும்.பாக்கு நீரிணை இந்திய மீனவர்களின் கொலைக்களம்.
இந்நிலையில் பாக்கிஸ்த்தானில் குவாடார் துறைமுகத்தில் சீனா பலமான மறைமுகத் தளம் அமைத்துள்ளது. இது அரபுக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் அமைக்கப் பட்டதாகும்.

.
இலங்கையில் அம்பாந்தோட்டையில் மிகப் பெரும் செலவில் ஒரு துறைமுகத்தை அமைத்து வருகிறது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்துமாக்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் சீனாவிற்க்குத் தேவையான பெற்றோலியம் அரபியநாடுகளில் இருந்து இவ்வழியாகவே செல்கிறது. இதில் சீனாவும் ஈரானும் இணைந்து இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளது.
.
மியன்மாரில்(பர்மா) சிட்வே என்னும் இடத்திலும் பங்களாதேசத்தின் முக்கியமான சிட்டகொங்கிலும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இவை வங்கக் கடலில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் சீனாவால் அமைக்கப் பட்டுள்ளன.
.
மேற்கூறிய நான்கு துறைமுகங்களும் இந்தியாவைச் சுற்றி சீனா போட்டுள்ள சுருக்குக் கயிறு.

கருத்துகள் இல்லை: